செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கக் கட்டணம்... தேசிய நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ கட்டணமின்றி பயணிக்கலாம் மத்திய அரசு

Sep 11, 2024 12:04:11 PM

செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில், ஆன்-போர்ட் யூனிட் எனப்படும் ஓ.பி.யு கருவி வாகனங்களில் வெளிப்புறத்தில் பொருத்தப்படும்.

இந்தக் கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, முதல் 20 கிலோமீட்டருக்குப் பின் அந்த வாகனம் பயணிக்கும் தூரத்தை செயற்கைக்கோள் வழியாகக் கணக்கிட்டு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

அதாவது, ஓ.பி.யு கருவி மூலம் வாகனத்தை பின்தொடரும் செயற்கைக்கோள் இணைப்பு, குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளுடன் ஒருங்கிணைத்து கட்டணம் கணக்கிடப்படும்.

முதல்கட்டமாக, அதிவிரைவுச் சாலைகள், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும், பெரும்பாலான வாகனங்களில் ஓ.பி.யு கருவி பொருத்தப்பட்ட பிறகு, சுங்கச்சாவடிகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்-போர்டு யூனிட்டுகளை, அரசு இணைய தளங்களில் வாங்கிக்கொள்ளலாம். இனி புதிதாக விற்பனைக்கு வரும் வாகனங்களில், இந்த ஆன்-போர்டு கருவியை தயாரிப்பு நிறுவனங்களே பொருத்தி விற்பனை செய்யும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் புதிய முறையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், தினமும் 20 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி செல்ல முடிவதுடன், சுங்கச்சாவடியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயன்பெற முடியும்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement