செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வயநாட்டில் கடும் நிலச்சரிவு மண்ணில் புதைந்த கிராமங்கள் மீட்பு பணியில் முப்படை வீரர்கள்

Jul 31, 2024 12:45:04 PM

இயற்கை எழில் சூழ்ந்த பல பகுதிகளை கேரளா கொண்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டும் பகுதி வயநாடு. இங்கு சுற்றுலாப் பயணிகளை நம்பி ஏராளமான வணிக நிறுவனங்களும், தனியார் விடுதிகளும் உள்ளன. இந்நிலையில், வயநாட்டில் பருவ மழை பெய்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் முண்டக்கை என்னும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதி கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டதால் அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள், விடுதிகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

பின்னர் அதிகாலை 4.10 மணியளவில் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, அதன் அருகே உள்ள சூரல்மலையில் உள்ள குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் மண்ணுக்குள் புதைந்தன. அதேபோல், சுற்றுலா விடுதிகள் அதிகம் கொண்ட மேப்பாடி, வெள்ளர்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த கோர நிலச்சரிவாலும், காட்டாற்று வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்த பல குடியிருப்புகளில் சிக்கி இன்னும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த நிலச்சரிவினால் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.

சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் அங்காங்கே சிதறிக்கிடக்கும் மனித சடலங்ளையும், உடற்பாகங்களையும் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படையும் களமிறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபடுகிறது. காட்டாற்று வெள்ளத்தை கடந்து மீட்புக்குழுவினரால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் மாலைக்கு பிறகே அப்பகுதியில் ராணுவம் ஹெலிகாப்டரில் தரையிறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டது.

தொடர் மழையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கயிறுகளை கட்டி காட்டாற்று வெள்ளத்தை கடந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். தனித்தீவுகளாக துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உயிருடன் எஞ்சியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

நிலச்சரிவின்போது உருண்டு வந்த பெரும் பாறைகளால் முண்டக்கை பகுதி உருக்குலைந்திருப்பதாகவும், பாறைகளில் சிக்கி அப்பகுதியில் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாகவும் ராணுவம் தரப்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முண்டக்கையில் ட்ரீவில்லி எனும் ரிசார்ட்டில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உள்பட பலர் மாயமானதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், வெள்ளரிமலை என்ற பகுதியில் பள்ளிக்கட்டிடம் ஒன்று இருந்த இடமே தெரியாமல் மண்ணுக்கு கீழே புதைந்து விட்டதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பாறைகளும், கட்டிடங்களும் 6 கிலோ மீட்டர் தூரம் வரை அடித்து வரப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழுவினரால் கூறப்படுகிறது.

48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது இத்தகையை பாதிப்புக்கு முக்கிய காரணம் என தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இதுவரை கேரளா சந்தித்திடாத பேரழிவு என கூறினார்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement