செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எக்ஸ்பிரஸின் பின்னால் மோதிய கூட்ஸ் ரயில்..! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த கோர விபத்து!!

Jun 17, 2024 07:57:25 PM

மேற்கு வங்கத்தில் கஞ்சஞ்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சீல்டா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது, கஞ்சஞ்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில். நியூ ஜல்பைகுரியை அடுத்த ஃபான்ஸிதேவா என்ற ஊரில் சிக்னலுக்காக காத்திருந்த போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில், கண்ணிமைக்கும் நேரத்தில் கஞ்சஞ்சங்கா எக்ஸ்பிரஸின் பின்புறத்தில் மோதியது.

விபத்தில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. கஞ்சன்ஜங்காவின் பெட்டிகள் அந்தரத்தில் தூக்கியபடி நிற்க, அதற்குக் கீழ் சரக்கு ரயிலின் எஞ்சின் புகுந்து நின்றது. சரக்கு ரயிலில் இருந்த ஏராளமான கண்டெய்னர்கள் கீழே உருண்டு சரிந்தன.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவக் குழுவினரும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ரயிலின் உருக்குலைந்த பாகங்களை வெட்டி எடுத்து உள்ளே சிக்கி இருந்தவர்கள் மீட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் நியூ ஜல்பாய்குரி மருத்துவனைக்கு ஆம்புலன்சுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நேரிட்ட இடத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

விபத்து நேரிட்டுள்ள இடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் முக்கியமான தடம் என்பதால் போக்குவரத்தை விரைவில் சீர் செய்யும் வகையில், எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயிலின் உருக்குலைந்த பெட்டிகள் விரைவாக அகற்றப்பட்டன.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ரயில்வே அதிகாரிகள், சரக்கு ரயிலின் ஓட்டுநர் சிக்னலை கவனிக்காமல் இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறினர். சரக்கு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு வேறு மனிதத் தவறுகள் காரணமா என்ற விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement