செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண்ணின் குடும்பத்தை மிரட்டியவர் கை முறிந்து சிறைப்பறவை ஆனார்!

May 05, 2024 04:53:31 PM

புதுச்சேரியில் இளம்பெண்ணை ஒரு தலையாகக் காதலித்த இளைஞர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தாய் மற்றும் தங்கையுடன் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அரை டிராயர் போட்டுக்கொண்டு காதல் வசனம் பேசும் இவர் தான் பழக்கடை பாலமுருகன் என்கிற அருண்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிகுப்பம் பகுதியை சேர்ந்த நிஷா என்ற பெண், ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த தனியார் பல் மருத்துவமனை உள்ள தெரு முனையில் சாலை ஓர பழக்கடை வைத்து அருண் வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது. நிஷா மருத்துவமனை செல்லும் போதும் வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து சென்றதாக கூறப்படும் அருண், ஒரு நாள் நிஷாவிடம் சென்று தாம் அவரைக் காதலிப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அருணின் கடை அருகே உள்ள மருத்துவமனையில் வேலையை விட்டு வேறு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார் நிஷா.

இதன் பிறகும் அருண் விடாமல் நிஷா புதிதாக பணிக்கு சேர்ந்த மருத்துவமனை மற்றும் அவரது வீட்டு அருகே சென்று தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் நிஷாவை அவருக்கு தெரியாமலே புகைப்படம் எடுத்து, தனது காதலி என்று சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்ததாக கூறப்படும் அருண், நிஷாவின் பெயரை மார்பில் பச்சை குத்திக் கொண்டு தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் எனகட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக வெள்ளியன்று காலை அருண் தனது தாய் சித்ரா மற்றும் தங்கை பரமேஸ்வரியுடன் நிஷா வீட்டிற்கு சென்று, நிஷா தன்னை திருமண செய்யாவிட்டால் குடும்பத்தையே கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. நிஷாவை கடத்திச் சென்று அருணுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவோம் என அருணின் தாயும் தங்கையும் மிரட்டியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் நிஷா புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அருணை தேடிச் சென்ற போது, போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களுடன் தள்ளு முள்ளில் ஈடுபட்டதாகவும் கூறிய போலீசார், அருகே இருந்த வாய்க்காலில் நிலை தடுமாறி விழுந்த அருணின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி மாவுக்கட்டு போடடுள்ளனர். பின்னர் அருணை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது தாய் மற்றும் தங்கையை தேடி வருகின்றனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement