செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலையில் கிடந்த கருப்பு..! அடுத்தடுத்து வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..! ஆவியா..? பேயா..? பூதமா..? யார் காரணம் ?

Apr 27, 2024 08:20:45 AM

காரைக்கால் மாவட்டம் நடுஓடுதுறை தேசிய நெடுஞ்சாலை வளைவு பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாயினர். பைக்குகளை விழவைத்த நிலக்கரி துகள்கள் சாலையில் தேங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

அடுத்தடுத்து வாகன ஓட்டிகள் சாலையில் சறுக்கி விழுந்த காட்சிகள் தான் இவை..!

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி ரயில் மட்டுமன்றி சாலை மார்க்கமாக நாகை, திருவாரூர் மாவட்டங்கள் வழியாகவும், காரைக்கால் வழியாகவும் டாரஸ் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகளின் கொள்ளளவை விட கூடுதலாக நிலக்கரியை ஏற்றிச்செல்வதால் வளைவுப்பகுதியில் திரும்பும் போது லாரிகளிலிருந்து சாலை ஓரமாக நிலக்கரி கொட்டிக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

சாலையோரம் கொட்டி செல்லும் நிலக்கரி துகள்கள் சாலையில் தேங்காமல் சுத்தப்படுத்த பொறுப்பேற்றுள்ள துறைமுக நிர்வாகம், பணிகளை முறையாக கண்காணிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காரைக்கால் நடுஓடுதுறை தேசிய நெடுஞ்சாலை வளைவு பகுதியில் செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலக்கரி துகள்கள் மீது ஏறி நிலை தடுமாறி சறுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரையில் சுமார் 7 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாயினர்.

குறிப்பாக 2மணி நேரத்தில் 6பேர் தொடர்ர்சியாக விபத்துக்குள்ளாகி கை கால்களில் காயம் அடைந்த தகவல் அறிந்து நமது செய்தியாளர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் 7 வதாக ஒரு விபத்து ஏற்பட்டு சேகர் என்ற இரு சக்கர வாகன ஓட்டி கையில் காயத்துடன் சட்டை கிழிந்து சாலை ஓரமாக அமர்ந்து இருந்தார்

இப்பகுதி மக்கள் நகராட்சி மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாமாக முன்வந்து , விபத்துக்களை தடுப்பதற்காக நிலக்கரி துகள்களை கூட்டி பெருக்கி துடைப்பத்தால் அப்புறப்படுத்தினர்


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement