செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண் சாமியாரை மறித்து தாக்கிய ஆசாமிகள் யார்? ‘நோ ராம்’ சொல்லி தாக்கியதாக புகார்..!

Mar 10, 2024 06:43:10 AM

உத்திரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக வந்த பெண் துறவி மீது பரமக்குடி அருகே பெயர் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நவம்பர் மாதம் நடை பயணமாக புறப்பட்டவர் பெண் துறவி ஷிப்ரா பதக். 38 வயதான இவருடன், அவரது தந்தை சகோதரர் ஆகியோர் காரில் துணைக்கு வந்தனர்.

வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வந்த ஷிப்ரா பதக் சிவராத்திரியையொட்டி
அந்தப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு பரமக்குடியில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் தங்கினார். சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு மேல் புறப்பட்டு பரமக்குடி சத்திரக்குடி இடையே நடந்து சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த 6 பேர் கும்பல் பெண் சாமியாரை வழி மறித்து வம்பிழுத்து, கார் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

இது குறித்து பரமக்குடி காவல் சரக துணை கண்காணிப்பாளர், அலுவலகத்தில் பெண் துறவி சிப்ரா பதக் புகார் அளித்தார், தங்களை வழிமறித்தவர்களை கண்டு பயந்து காருக்குள் சென்று அமர்ந்ததாகவும், அவர்கள், ராமர் இங்கு இல்லை, அயோத்தியில் இருக்கிறார், இங்கு உனக்கு என்ன வேலை? ஸ்ரீராமரை தேடி அயோத்திக்கு செல்., என்று உரக்க சப்தமிட்டவாறே கார் மீது கல் வீசி தாக்கியதாக சிப்ரா பதக் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து 2 இன்ஸ்பெக்டர்கள் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சம்பவம் எங்கே நடந்தது? என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் சிசிடிவி காட்சிகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர். பெண் துறவியின் உறவினர்கள் இருவர் நீதிபதியாக இருப்பதாகவும் அவர்கள் நேரடியாக வருவதாகவும் கூறியுள்ளதால், இந்த புகார் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement