செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

9 வயது சிறுமியிடம் கொடூரர்களின் இச்சை செயல்.. சாக்லேட் கொடுத்து பழக்கம்.. கொடூர கொலை நடந்தது எப்படி..? சிறுமிகளின் பெற்றோரே உஷார்..!

Mar 06, 2024 08:09:48 PM

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, கொலை செய்து கை,கால் கட்டப்பட்டு வேஷ்டியில் கட்டி வாய்க்காலில் வீசிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்

9 வயது சிறுமியை கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, கொலை செய்து, கைகால்களை கட்டி வாய்க்காலில் வீசிய சம்பவம் புதுச்சேரியை போராட்டக்களமாக மாற்றியுள்ளது.

வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த தங்களது 9 வயது மகளை காணவில்லை என புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி முத்தியால் பேட்டை காவல்நிலையத்தில் சனிக்கிழமையன்று புகார் அளித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அச்சிறுமி அவர் வசிக்கும் தெருவிலேயே தனியாக நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

போதிய எண்ணிக்கையில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்படாததால்,
தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைத்து தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. திங்கள் கிழமை காலை போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சோலை நகர் அருகாமையில் உள்ள அம்பேத்கர் நகர் வாய்க்கால் பகுதியில் வெள்ளைத் துணியில் உடல் ஒன்று இருப்பதை கண்டனர் அந்த துணியை திறந்து பார்த்ததில் துணிக்குள் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து உடலை கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

சிறுமியின் தந்தை சாலை மறியல் நடக்கும் இடத்திற்கு வந்து கதறி அழுது தன் மகளை கொலை செய்தவர்களை விட்டு விடாதீர்கள் என காவல்துறை அதிகாரியிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார்.

விசாரணையில், சடலம் கிடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெற்றோர்களுடன் சேர்ந்து போராடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் கருணாஸ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், குற்றம் புலானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான கருணாஸ் ஐஸ்கிரீம் கொடுத்து சிறுமியை ஏமாற்றி அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான தச்சுச்தொழிலாளி விவேகானந்தனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட போது சிறுமி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இரு காமக்கொடூரர்களும் சேர்ந்து சிறுமியின் கை கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் சுற்றி வீட்டின் பின்புறம் உள்ள வாய்காலில் வீசி விட்டு சென்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொல்லப்பட்ட தகவலை அடுத்து புதுச்சேரியில் பல இடங்களில் நீதிகேட்டு உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உயிரிழ்ந்த சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நிவாரணமாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் தங்களது கடமை முடிந்துவிட்டது என கருதாமல், புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் உதவியுடன் சிசிடிவி கேமிராக்களை பொருத்தவேண்டும். அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களின் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒழிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement