செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தெருவில் விளையாடிய பாப்பா... சாக்கடை கால்வாயில் சடலமாக.. மூட்டை கட்டி வீசிய கொடூரம்..! கொதித்துப் போய் உறவினர்கள் மறியல்

Mar 06, 2024 05:35:31 PM

புதுச்சேரி முத்தியால் பேட்டையில் வீட்டின் அருகே விளையாடிய 9 வயது சிறுமியை கடத்தி கொலை செய்து, சடலத்தை மூட்டை கட்டி சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்களும் பொதுமக்களும் நடத்திய மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே தெருவில் விளையாடச்சென்றார். மாணவி வீடு திரும்பாத நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தங்கள் மகளை காணவில்லை என்று பெற்றோர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து சிறுமி எங்கு சென்றார் ? என்னவானார் ? என்று தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

விரைந்து சென்ற போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது உள்ளே மாயமான அந்த சிறுமி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம ஆசாமி சிறுமியை கடத்திச்சென்று கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடை கால்வாயில் வீசிச்சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்த சிறுமியின் சடலத்தை மீட்டு வெளியே எடுத்து வந்தனர். அதற்குள்ளாக சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீயாய் பரவ ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்

சிறுமியின் சடலம் கொண்டு கொல்லப்பட்ட வாகனத்தை துரத்திய படியே உறவினர்கள் அழுதபடி ஓடிச்சென்றனர்

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புள்ள கொலையாளிகளை கைது செய்ய கோரி மக்கள் முத்தியால் பேட்டை பிரதான சாலையில் அமர்ந்து 3 மணி நேரம் மறியல் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து முடங்கியது

சிறுமி காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான விவேகானந்தன், 19 வயதான கருணாஸ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து கார்பென்டர் வேலை செய்யும் விவேகானந்தனின் வீட்டிக்கு  அழைத்துச் சென்றதாக கைதான கருணாஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நிலையில், அவர் சத்தம் போட்டதால் இருவரும் சேர்ந்து துன்புறுத்தி கொலை செய்து, கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். 

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச்சென்றது யார் ? எதற்காக அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்து சந்தேகத்துகிடமான முதியவர் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊர் முழுக்க குழந்தை கடத்தல் வதந்தியால் பல்வேறு நபர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார்..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தரப்பு மனு தள்ளுபடி... சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது செல்லும்
திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு
காளஹஸ்தியில் ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்த நடிகை நமீதா
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்


Advertisement