செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 19, 2024 09:57:45 AM

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிதார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை சமாளித்து வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது

அனைவருக்கும், அனைத்தும் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயணித்து வருகிறது

நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடையும் வகையில் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பாதையில் நாடு பயணித்து வருகிறது

ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் மூலம் அனைத்துத்துறைகளிலும் நாடு தன்னிறைவு பெற்று முன்னேறி வருகிறது

அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன

80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன

 மதச்சார்பின்மையை மக்களுக்கான அரசின் திட்டங்கள் மூலம் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது

சாதி, மத வேறுபாடுகள் இன்றி, திட்டங்களின் பயன்கள் அனைவரையும் நேரடியாக சென்றடைகின்றன

 சமூக நீதி அரசியல் கட்சிகளின் கோஷமாக உள்ள நிலையில், சிறந்த நிர்வாகத்தின் மூலம் அதை செயல்படுத்தி வருகிறோம்

யாருக்கு என்ன தேவை என்ன என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்

கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்

10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி நேரடி மானியம்

விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத் திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது

மீண்டும் எங்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்

அறுதிபெரும்பான்மையுடன் மீண்டும் எங்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் - நிதியமைச்சர்

புதிய கல்வி கொள்கை மூலம் கல்வியில் சீர்திருத்தங்கள்

கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம்

7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலை.

10 ஆண்டுகளில் 7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன

1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டங்கள் மூலம், இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது

1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

நால்வகை பிரிவினருக்கு முன்னுரிமை

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நாங்கள் மிக உயரிய முன்னுரிமை அளித்து வருகிறோம்

MSP தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது

குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது

ஏழைகளின் நலனே தேசத்தின் நலன்

ஏழை, எளிய மக்களின் நலனே தேசத்தின் நலன் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது

1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

திறன்மிகு இந்தியா திட்டத்தில் 1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன்

10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது

4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படுகிறது

பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரிப்பு

பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டங்களால் மகளிர் பயன் அடைந்துள்ளனர்

இதுவரை இல்லாத வளர்ச்சியை பெறவுள்ள இந்தியா

அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்திருத்தங்களை அரசு திட்டமிட்டு வருகிறது

அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி இருக்கும்

கிசான் திட்டத்தால் 11.8 கோடி விவசாயிகளுக்கு பலன்

பிரதமரின் கிசான் திட்டத்தால் 11.8 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்

பின் தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மாநில அரசுகளுடன் பணியாற்றுகிறோம்

நாடு முழுவதும் புதிய 3000 ஐடிஐ-கள்

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 3000 ஐடிஐ-களை ஏற்படுத்தியுள்ளோம்

54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்பாடு

திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது

சராசரி உண்மையான வருவாய் அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் உண்மையான சராசரி வருவாய் அதிகரித்துள்ளது

வளர்ச்சியை சாத்தியமாக்கிய ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் மூலம் வரி அடிப்படையிலான வளர்ச்சி மேம்படுத்தப்பட்டுள்ளது

1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள்

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்

1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் வீடு ஒன்றிற்கு தலா 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்

சூரிய மின் ஆற்றலுக்கான சாத்தியமில்லாத சமயங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்

5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் நாடு முழுவதும் கட்டப்படும்

பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் அதிகரிக்கப்படும்

மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்

மருத்துவக்கல்லூரிகளை அதிகரிக்க குழு

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்

டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம்

யூரியாவைத் தொடர்ந்து டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்

வேளாண் துறையில் கூடுதல் முதலீடுகள்

வேளாண்துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.

வேளாண் விளைபொருள், அறுவடைக்கு பிந்தையை நடவடிக்கைகளுக்கு கூடுதல் முதலீடுகள் மேற்கொள்ளப்படும்

கடல் உணவுப்பொருட்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது

கடல் உணவுப்பொருட்களின் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது

மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

1 கோடி பெண்கள் லட்சாதிபதியாகியுள்ளனர்

சுய உதவி குழு கடன் உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் மூலம் 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர்

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

ரூ.1 லட்சம் கோடி மூலம் வட்டியில்லா கடன்

50 ஆண்டுகளுக்கு ஐ.டி இளைஞர்களுக்கு கடன்

தொழில்நுட்பத்துறையில் உள்ள இளைஞர்களுக்கு கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.1 லட்சம் கோடி நிதி மூலம் 50 ஆண்டுகளுக்கு ஐ.டி இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்

3 கோடி வீடுகள் இலக்கை நெருங்கியுள்ளோம்

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளன

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன

சரக்கு ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக வழித்தடங்கள்

சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்

புதிதாக 1,000 விமானங்கள் வாங்க நிறுவனங்கள் ஆர்டர்

நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்க உள்ளன

10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது

பாதுகாப்புத்துறையில் ரூ.11,11,111 கோடி முதலீடு

பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1%ஆக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்

பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.யில் 3.4%ஆக இருக்கும்

மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும்

 மின் வாகன உற்பத்திக்கு ஊக்கம்

மின்சார வாகன உற்பத்திக்கும், சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் ஊக்குவிக்கப்படும்

ரயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்படும்

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும்

பொருளாதார காரிடார் வளர்ச்சிக்கு உதவும்

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார காரிடார் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான்

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் உடன் ஜெய் அனுசந்தான்(ஆராய்ச்சி) என்பதே மோடி அரசின் குறிக்கோள்

ஜூலையில் வளர்ச்சிக்கான விரிவான திட்டம்

ஜூலையில் நாட்டின் வளர்ச்சிக்கான விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படும்

வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்வு

10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்வு

நிதிப்பற்றாக்குறை 5.1%ஆக குறைக்கப்படும்

2024-25ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1%-க்குள் கட்டுப்படுத்தப்படும்

நேரடி வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதி நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுகிறது

வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி

லட்சத்தீவு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம்

மாலத்தீவு விவகாரத்தைத் தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்

நேரடி & மறைமுக வரி விதிப்பில் மாற்றமில்லை

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

ஐ.டி ரிட்டர்ன் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது

புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வருமானம் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது

இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

இடைக்கால பட்ஜெட் என்பதால் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை

ரூ.44 லட்சம் கோடி செலவு

வரும் நிதியாண்டில் மத்திய அரசின் செலவு ரூ.44 லட்சம் கோடியாக இருக்கும்

 

 


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement