செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி குழந்தை இராமரை வரவேற்கும் கோலாகலம்!

Jan 22, 2024 09:21:39 AM

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 57 ஆயிரத்து 400 சதுர அடியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காண, அயோத்தியில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

திரேதா யுகத்தில் அயோத்தியில் அன்னை கௌசல்யா மற்றும் தசரதன் ஆகியோருக்கு பிறந்தவர்தான் ஸ்ரீராமர். அவர் நவமி நாளில் பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில், பக்தர்கள் “ராம நவமி” என்று சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

ராமபிரான் பிறந்த மண்ணான அயோத்தியில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளைக் கொண்டதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரமும் கொண்ட இக்கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டவை. 392 தூண்கள், 12 கதவுகள் உள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் சுவர்களிலும் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பார் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கருவறையில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்குத் திசையிலிருந்து 32 படிக்கட்டுகள் ஏறி, பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்காக சாய்வுதளம், மின் தூக்கி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிலும் 732 மீட்டர் நீளம், 14 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் அருகே வரலாற்று சிறப்புமிக்க, பழங்கால கிணறு ஒன்றும் உள்ளது. 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் மண்டபம் ஒன்றும் அங்கு மருத்துவம் மற்றும் லாக்கர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளது.

சரியாக நண்பகல் 12.20 மணிக்கு பால ராமரை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காண, இந்தியாவிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். ஒட்டுமொத்த நகரமுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement