செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நர்மதை ஆற்றில் மிதக்கும் 160 டன் மின் டிரான்ஸ்பார்மர்..! 800 ஏக்கரில் சோலார் பேனல்..!!

Jan 06, 2024 10:56:47 AM

5 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மத்திய பிரதேச மாநிலம் ஓம்கரேஸ்வர் அணையில் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில், மின் உற்பத்தியை துவங்க உள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தின் சிறப்பு கூறுகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...

மத்திய பிரதேசத்தில் கடல் போல காட்சியளிக்கும் நர்மதை ஆற்று அணை மீது பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தின் காட்சிகள் தான் இவை.

கொட்டித் தீர்க்கும் கனமழை ஒருபுறம், மழையே இல்லாத கடும் வறட்சி ஒருபுறம் என உலகையே பருவநிலை மாற்றம் ஆட்டம் காண வைத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசும், மாநில அரசோடு இணைந்து மத்திய பிரதேசத்தின் காண்ட்டுவா மாவட்டத்தில் உள்ள ஓம்கரேஸ்வர் அணை பகுதியில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகிறது.

நர்மாத நதியில் அமைந்துள்ள இந்த அணையில் தினசரி 5 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் 600 மெகா வாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் வகையில் 800 ஏக்கரில் சூரிய ஒளி தகடுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. 2 கட்டங்களாக சூரிய ஒளி தகடுகளை நிறுவ திட்டமிட்டு அதற்கான பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கியது.

முதல் கட்டத்தில் 300 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி தகடு தண்ணீரின் மேலே மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் வரும் மார்ச் முதல் வாரத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தனர் அதிகாரிகள்.

வீட்டின் மாடியில் கூட பேனல் பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் போது, இதில் என்ன சிறப்பு என்ற கேள்விக்கு, தண்ணீரின் மேற்பரப்பில் சுமார் 400 ஏக்கரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சூரிய ஒளி பேனல் அமைக்கப்பட்டிருப்பதும், தயாரிக்கப்படும் மின்சாரத்தை சேமிக்க 160 டன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களும் தண்ணீரில் மிதக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.

160 டன் கொண்ட இந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் இன்வெர்ட்டர் இருக்க கூடிய அமைப்பானது பெரோ ((FERRO)) சிமெண்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ளதால் அவை நதியில் மிதந்து கொண்டே இருக்கும் என தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். ஏதாவது பழுது என்றாலும் இந்த சிஸ்டத்தை கரைக்கு தள்ளிக் கொண்டே சென்று சரி செய்து விடலாம் எனவும் கூறப்படுகிறது.

சூரிய ஒளி பேனல்களை குளிரூட்ட தேவைப்படும் தண்ணீரை அணையில் இருந்தே எடுத்து பயன்படுத்துவதோடு அது மீண்டும் அணையிலேயே சேகரிக்கப்படுவதால் தண்ணீர் சேமிப்பு ஏற்படுவதோடு, தண்ணீர் ஆவியாவதும் தடுக்க முடிகிறது.

வழக்கமாக ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 5 முதல் 7 ரூபாய் செலவாவதோடு பராமரிப்பு செலவுகளும் அதிகமாக இருக்கும் நிலையில், சூரிய ஒளி தகடுகள் மூலம் ஒரு யூனிட் உற்பத்தி செய்ய 3 ரூபாய் 21 காசுகள் மட்டுமே செலவு ஆவதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்போடு, பொருளாதார சிக்கனத்தை கொண்ட இத்திட்டம் வெற்றி பெற்றால் பல்வேறு பகுதிகளிலும் செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement