செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு யோகா செய்யவும் தூங்கவும் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தல்

Nov 22, 2023 12:07:02 PM

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் பத்துநாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் யோகா செய்யவும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக நேற்று சுரங்கத்தினுள் பைப் மூலம் கேமரா செலுத்தப்பட்டு தொழிலாளர்கள் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து குழாய் மூலமாகவே அவர்களுக்கு அதிக காரம் எண்ணெய் இல்லாத சைவ உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன. செல்போன் சார்ஜர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூக்கம் மிகவும் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தூங்குவதில் சிரமம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாட்களில் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் என்றும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க சுரங்கப்பாதையின் மேல் பகுதி வழியே துளையிடும் பணி விரைவில் தொடங்கப்படும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

துளையிட வேண்டிய பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், துளையிடும் கருவிகளை சுரங்கப் பகுதிக்குக் கொண்டுசெல்ல புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரு நாள்களுக்கு முன்பு, பாறை இடுபாடுகள் இடையே பொறுத்தப்பட்ட ஆறு அங்குல குழாய் வழியே செலுத்தப்பட்ட கேமராவில் தொழிலாளர்கள் படம் பிடிக்கப்பட்டனர்.

அவர்களுடன் மீட்புப் குழுவினரும், குடும்பத்தினரும் பேசினர். உள்ளே சிக்கியிருப்பவர்களுக்குக் குழாய் வழியே உணவு, மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடியை தொடர்புகொண்டு விளக்கியதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மீட்கப்படும் தொழிலாளர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement