செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு.. தாக்குதல் நடத்தியது ஏன்? சபை உறுப்பினர் வாக்குமூலம்

Oct 30, 2023 08:47:12 AM

கேரளாவில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 2 பெண்கள், 12 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், குண்டு வைத்தது தான் என, சரணடைந்தவர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கொச்சி அருகே உள்ள களமசேரியில் ஞாயிறன்று சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட ஜெபக்கூட்டத்தில் காலை சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து புகை மூட்டமும் தீயும் அப்பகுதியில் பரவியது.

நடந்தது என்ன என்பதை ஊகிப்பதற்குள் அங்கு எழுந்த தீயாலும், புகை மூட்டத்தாலும் சிறுவர்கள் முதியவர்கள் நிலைகுலைந்து பயந்து அலறியவாறே கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

ஜெபத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரும் கவச உடையோடு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

கேரள காவல்துறையின் தீவிரவாத தடுப்பு குழுவினரும், தேசிய புலனாய்வு முகமையும் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில்,ஜெபக்கூட்டத்தில் IED வகை குண்டு வெடித்துள்ளதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்ததோடு, குறைந்த தீவிரம் கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக மார்ட்டின் டொமினிக் என்பவர் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடையும் முன்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தான் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளார். 16 ஆண்டுகளாக ஜெபக்கூட்டம் நடத்திய சபையின் விசுவாசியாக இருந்ததாகவும் பின்னர் அந்த சபையின் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை எனவும் கூறியுள்ளார்.

சபையினர் தேச துரோக கருத்துக்களை பேசி வருவதாகவும், வெள்ளத்தின் போது கூட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்யாமல் சபையினரை மட்டுமே தேடிச் சென்று உதவி செய்ததாகவும் மார்ட்டின் டொமினிக் கூறியுள்ளார். இதனை கண்டித்தும் கேட்காததால் வெடிகுண்டு வைத்ததாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் மார்ட்டின் டொமினிக்.

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி கண்டுபிடித்து 6 மாதமாக பயிற்சி எடுத்ததாக போலீசாரிடம் மார்ட்டின் டொமினிக் வாக்குமூலம் அளித்துள்ளார். மார்ட்டின் டொமினிக் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான உபா உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement