செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தலையணையால் அமுக்கி போலீஸ்காரர் கொலை ...! ஷிவானி சிக்கிய பின்னணி..

Aug 07, 2023 09:43:51 AM

போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பால் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரை தலையனையால் அழுத்தி கொலை செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. சீரியஸ் ஆக்டிங் ஷிவானி சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 35 வயதான காவலர் ரமேஷ் . இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கு 8 வயது மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1ம்தேதி பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷ், மது அருந்தியுள்ளார். மது போதை தலைக்கு ஏறிய நிலையில் தள்ளாடி மயங்கி விழுந்த தனது கணவர் ரமேஷ் சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மனைவி ஷிவானி கண்ணீருடன் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டுக்கு வந்து செல்லும் டாக்ஸி ஓட்டுனர் ராமராவ் என்பவரும் சிலருக்கு ரமேஷ் உயிரிழப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மாரடைப்பு என்றால் மருத்துவர்கள் பரிசோதிக்கும் முன்பே, உறவினர்களுக்கு தகவல் சொல்லி அடக்கம் செய்ய அவசரம் காட்டுவது ஏன் ? என்று அங்கு வந்த சிலருக்கு சந்தேகம் எழுந்தது.

ஷிவானியின் கதறல் அழுகையால் உறவினர்களும் மதுவால் ஒரு குடும்பமே இப்படி ஆகி விட்டதே..! என்று பரிதாபம் கொண்டனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக , ரமேஷின் நெருங்கிய உறவினர்கள் சிலர், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ரமேஷின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்

இதில் சாவு செய்தி சொன்ன கால்டாக்ஸி ஓட்டுனர் ராமாராவ் முன்னுக்கு பின்னாக பதில் அளித்து போலீசிடம் உண்மையை கக்கினான். ரமேஷுக்கு குடிபழக்கம் இருந்த நிலையில் , அடிக்கடி வீட்டுக்கு வரும் கணவரின் நண்பரான ராமாராவுடன் , ஷிவானிக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்து ரமேஷ் அண்மையில் கடுமையாக கண்டித்துள்ளார். அதன் பின்னர் ராமாராவை வீட்டுக்குள் விடவில்லை.

இதையடுத்து தங்களது உறவுக்கு தடையாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட ஷிவானியும், ராமராவும் செல்போனில் பேசி திட்டமிட்டுள்ளனர். அதன் படி கடந்த 1 ந்தேதி காவலர் ரமேஷுக்கு மூக்குமுட்ட மது ஊற்றிக்கொடுத்த ஷிவானி, போதையில் மயங்கிய கணவரை படுக்கையில் கிடத்திவிட்டு, காதலன் ராமராவை செல்போனில் அழைத்துள்ளார்.பெண் தோழி நீலாவுடன் அங்கு வந்த ராமராவ், ஷிவானியுடன் சேர்ந்து காவலர் ரமேஷை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு மாரடைப்பால் பலியானதாக கூறி கண்ணீர் ஆக்டிங் போட்டது அம்பலமானது. மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காவலர் ரமேஷ் வீட்டுக்கு , ராமராவ் பெண் தோழியுடன் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து ஷிவானி, ராமாராவ் , தோழி நீலாஆகிய மூவரையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். ஆக்டிங் ஷிவானியின் விபரீத புத்தியால் அவரது இரு பெண் குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement