செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அழுவதில் நடிகையர் திலகமப்பா.. அகப்பட்டதால் ஆயுள் கைதியப்பா.. மொத்த வித்தையும் வீணான தருணம்..!

Aug 04, 2023 09:16:24 AM

காதலனுடன் சேர்ந்து கட்டுமான அதிபரான கணவனை கொன்று புதைத்த வழக்கில் அழுது புரண்டு நாடகம் போட்ட பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

குழிதோண்டி புதைக்கப்பட்ட கணவன் சடலம் மீட்கப்பட்டதும் தன்னால் நிற்க கூட இயலாத படி கண்ணீர் விட்டு கதறி அழுத.. இந்த நடிகையர் திலகத்துக்குத்தான் ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது

புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான அதிபர் விவேக்பிரசாத். இவரது மனைவி ஜெயதி பிரசாத். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் புதுச்சேரி அருகேயுள்ள பூத்துறை பகுதியில் கட்டடப்பணியை பார்க்கச் சென்ற விவேக்பிரசாத் வீடு திருப்பவில்லை. தனது கணவர் மாயமானதாக ஜெயதி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சில தினங்களில் அவரை கொலை செய்து புதைத்தது அவரிடம் ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்த பாபு என்கிற ஷேக் பீர் முகம்மது என்பது தெரியவந்தது.

அவன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து விவேக் பிரசாத்தின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது தனது கணவர் பிரிவை தாங்க இயலாமல் விக்கித்து தடுமாறியபடி நின்ற ஜெயதி கதறி அழுதார்

அபோதைய காவல் ஆய்வாளர் தங்கமணி நடத்திய விசாரணையில் கார் ஓட்டுனர் பாபுவுக்கு விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயதிக்கும் தகாத உறவு இருந்து வந்ததை செல்போன் தொடர்புகள் மூலம் விவேக் பிரசாத் தெரிந்து கொண்டதால், அவரை இரு வரும் சேர்ந்து திட்டம் தீட்டி தீர்த்துக்கட்டியது அமபலமானது. இந்த கொலை வழக்கில் கதறி அழுது நாடகம் போட்ட ஜெயதியும் கைது செய்யப்பட்டார்

காதலன் சேக் பீர் முகமது , ஜெயதி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சேக் பீர் முகமதுவுக்கும் ஜெயதிக்கும் ஆயுள் தண்டனையும் , அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கிற்கு தேவையான ஆதாரங்கள மற்றும் சாட்சியங்களை பாதுகாத்து வழக்கை திறம்பட நடத்தி கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement