செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கார்கில் வெற்றி தினம் : உயிர் நீத்த வீரர்களுக்கு இந்தியா முழுவதும் மரியாதை

Jul 26, 2023 04:38:58 PM

உறையச் செய்யும் குளிர்..! நடுங்க வைக்கும் உயரம்..! லடாக்கில் உள்ள கார்கில் பனிமலைச் சிகரப் பகுதியை கைப்பற்ற 1999-ஆம் ஆண்டு முற்பட்டது பாகிஸ்தான் ராணுவம். இந்திய ராணுவ வீரர்கள் பலர் இன்னுயிரைத் தந்து அண்டை நாட்டு ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்து மூவர்ணக் கொடியை நிலைநாட்டியதைக் குறிக்கும் நாள், கார்கில் விஜய் திவஸ்!

நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்து போரின் வெற்றிக்கு வழி வகுத்த வீரர்களின் நினைவைப் போற்றி வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ட்வீட் செய்துள்ளார்.

நாட்டின் துணிச்சல் மிக்கவர்களின் வீர வரலாற்றை கார்கில் வெற்றி தினம் கண் முன்னே கொண்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர். அப்போது போர் நினைவிடத்திற்கு மேல் நான்கு மிக்-29 ரக போர் விமானங்கள் பறந்து மரியாதை செலுத்தின.

சீட்டல் ரக ராணுவ ஹெலிகாப்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தின.

ராணுவ வீரர்கள் மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்த்தியாகம் செய்த சக வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சாரணர்கள் இசைக்குழு தேச பக்திப் பாடல்களை இசைத்தது. ராணுவ வீரர்கள் சிலரும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் பாடல்களை பாடினர்.

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நினைவுக் குடில் என்ற பெயரில் திராசில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

பின்னர் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், கார்கில் யுத்தத்தில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை இந்திய ராணுவம் தாண்டிச் செல்லவில்லை என்றும் சர்வதேச சட்டங்களை இந்தியா எப்போதும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், இந்தியா தனது கவுரவம் மற்றும் கண்ணியத்தை காத்துக்கொள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி செல்லக்கூடத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement