செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அகிம்சையைப் போதித்த இந்தியாவுக்கு ஆயுதங்களாலும் அடி கொடுக்கத் தெரியும் என உலகுக்கு பறைசாற்றிய வெற்றி தினம் இன்று.. !!

Jul 26, 2023 11:18:32 AM

கார்கில் சிகரங்களைக் கைப்பற்ற முயன்ற பாகிஸ்தானை இந்திய ராணுவம் விரட்டியடித்து வெற்றி கொண்ட கார்கில் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதனைச் சரித்திரத்தைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு....

1999ம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த உளவுத்துறை தகவலையடுத்து ராணுவத்தினர் உஷார் படுத்தப்பட்டனர்.

ரத்தத்தை உறைய வைக்கும் குளிரில் கார்கில் பகுதிக்குச் சென்ற இந்திய ராணுவ வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அங்கு வந்திருந்தது தீவிரவாதிகள் அல்ல பாகிஸ்தான் ராணுவம் என்பதைக் கண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்குள், எதிரிகள் 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஆக்கிரமித்திருந்தனர்.

டைகர் குன்றுகள், திராஸ் மலைக் குன்றுகள், சிந்து நதியின் கிழக்கில் உள்ள படாலிக் பகுதி என இந்திய நிலைகளை கைப்பற்றியதோடு, ராணுவ தளங்களையும் அமைத்திருந்தது பாகிஸ்தான். அவர்களின் அடுத்த குறி ஸ்ரீநகர், லே தேசிய நெடுஞ்சாலை என்பதை உணர்ந்த இந்தியா அதிவேகமாகக் களமிறங்கியது. அதற்கு ஆப்ரேஷன் விஜய் என்று பெயரும் சூட்டப்பட்டது.

உலகிலேயே மிக உயரமான இடத்தில் இரு தரப்பும் போரில் குதித்தன. ஆனால் எதிர்பார்த்ததை விட போர்க்களம் மிகவும் கடினமாக இருந்தது. துப்பாக்கிகள் தட தடக்கும் சப்தமும், பீரங்கிகளின் குண்டு மழையும் பனிப் பிரதேசத்தை கிடு கிடுக்க வைத்தன.

பகல் பொழுதில் இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த... இரவில் தரைப்படையினர் அங்குலம் அங்குலமாக முன்னேறி எதிரிகளை துவம்சம் செய்தனர்...

சுமார் 85 நாட்கள் இடைவிடாது நடந்த தாக்குதலில் 527 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வெற்றியை ஈட்டித் தந்தனர். பாகிஸ்தான் தரப்பிலோ, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இழக்க நேரிட்டது. அகிம்சையைப் போதித்த இந்தியாவுக்கு ஆயுதங்களாலும் அடி கொடுக்கத் தெரியும் என உலகுக்கு பறைசாற்றிய வெற்றி தினம் இன்று.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement