செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்! அடுத்த கட்டம் என்ன..? அடுக்கடுக்கான ஆலோசனைகள்!

Jul 18, 2023 07:02:48 PM

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி அமலாக்கத்துறை விசாரணைக்காக இன்று மாலை 4 மணிக்கு அவர்களது அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கனிமவள முறைகேடு மற்றும் அது தொடர்பான அன்னிய செலாவணி முறைகேடு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோர் வசிக்கும் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். இதில், 70 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்களை கண்டெடுத்த அதிகாரிகள், ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

சோதனைக்கு இடையே அமைச்சர் பொன்முடியை இரவு 8 மணி வாக்கில் சென்னை சென்னை சாஸ்திரி பவன் 3-வது தளத்தில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதிகாலை 3 மணி வரை நடந்த விசாரணைக்குப் பின் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மனும் வழங்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை வீட்டில் உள்ள பொன்முடியை அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, கே.என். நேரு, ரகுபதி, சி.வி. கணேசன், மூர்த்தி உள்ளிட்டோரும், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் நேரில் சென்று சந்தித்தனர்.

அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூருவில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

பொன்முடியை சந்தித்த பின் பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்ட பொன்முடி நலமுடன் நன்றாக உள்ளதாக கூறினார்.

தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில், மடியில் கனமில்லை என்பதால் பொன்முடிக்கு வழியில் பயமில்லை என்றார்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement