செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்.. அமித்ஷாவுக்கு தொலைபேசியில் அழைப்பு.. பிரான்சிலிருந்து நிலவரத்தை கேட்டறிந்த பிரதமர்...!!

Jul 15, 2023 02:09:09 PM

யமுனை வெள்ளத்தால் டெல்லி மக்கள் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள நிலையில், நிலவரம் குறித்து, பிரதமர் மோடி ஃபிரான்சிலிருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். 

தலைநகரில் கனமழை இல்லாதபோதும், ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் நீரால் டெல்லி யமுனை ஆற்றின் நீர்மட்டம், அபாய அளவை விட 3 மீட்டருக்கு மேல் உயர்ந்து நகரை வெள்ளம் சூழ்ந்தது. 

டெல்லியில் உச்சநீதிமன்றம், ராஜ்காட், காஷ்மீரி கேட் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சுற்றிவளைத்த நிலையில், நீர் தேக்கப்பகுதி போல செங்கோட்டை காட்சியளிக்கிறது.

குடியிருப்புகளை மூழ்கடித்த யமுனை வெள்ளத்தில் சாலைகளில் அறைக்கலன்கள் மிதக்கும் நிலையில், கார் உள்ளிட்ட வாகனங்களும் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் மார்பளவு நீரில் மக்கள் நடந்து செல்வதை காணமுடிகிறது.

யமுனை நதி வெள்ளத்தில் டெல்லி பழைய ரயில்வே பாலம் முழுமையாக மூழ்கியது. நகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன நெரிசலில் சிக்கி தலைநகர் வாசிகள் திக்குமுக்காடி வருகின்றனர். சராய் காலே கான் உள்ளிட்ட பகுதிகளில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன.

டெல்லியில் எங்கு நோக்கினும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், ஃபிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். அடுத்த 24 மணி நேரத்தில் யமுனையில் நீர்மட்டம் குறையும் என பிரதமர் மோடியிடம் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement