இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்று கொண்டதை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
உச்சநிதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவெங்கட்டநாராயணபட்டி ஆகியோர் அண்மையில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதன்படி இருவரும் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.