செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தத்தளிக்கும் தலைநகரம்.. நீர்த்தேக்கமான செங்கோட்டை.. டெல்லிக்கு துயரமான யமுனை..!

Jul 14, 2023 10:23:01 AM

ஹரியானாவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், யமுனை ஆற்று வெள்ளம் தலைநகரான டெல்லிக்குள் புகுந்து மக்களை தத்தளிக்க வைத்துள்ளது.

டெல்லியில் ஒரு சொட்டு மழையில்லை.. ஆனால் ஊருக்குள் புகுந்த ஆர்பரிக்கும் யமுனையின் வெள்ளத்தால் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை நீர்த்தேக்கம் போல காணப்படுகின்றது

சாலைகளில் வாகனங்கள் செல்ல இயலாமல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.

டெல்லி அரசின் தலைமை செயலகம் நீச்சல் குளம் போல காட்சி அளிக்கின்றது...

டெல்லியின் அண்டை மாநிலமான அரியானாவில் அடித்து நொறுக்கிய கனமழை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களுக்கு அதிக அளவு நீர் வரத்து உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டதால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது.

பல பாலங்களை தொட்டுச்செல்லும் யமுனையின் வெள்ளம் டெல்லி வாசிகளுக்கு துயரமாக மாறி இருக்கின்றது.

யமுனை ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து குடியிருந்த பல குடும்பங்களை மீட்டு காவல்துறையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

யமுனா பஜார் பகுதியில் சொகுசு பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீரில் மூழ்கி தவித்து நிற்கின்றது.

காஷ்மீர் கேட் பகுதியில் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் படகில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டனர்.

டெல்லி செங்கோட்டை அருகே சைக்கிள் ரிக் ஷாவை மீட்டுவர முயன்றவரை, ரிக் ஷாவுடன் வெள்ள நீர் இழுத்துச்சென்றது.

யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், நகருக்குள் நீண்ட தூரம் கனரக வாகனங்கள், செல்ல இயலாமல் கடும் போக்குவர்த்து நெரிசலில் தவித்து நிற்கின்றன.

யமுனையின் ஆக்ரோஷ வெள்ளம் தலை நகரை தத்தளிக்கவிட்டுள்ளதால், சுத்திகரிப்பு நிலையங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது, 3 நாட்கள் குடி நீர் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement