இமாச்சலத்தில் கிண்ணாவூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில ஆடு மேய்க்கவும் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடவும் சென்ற 28 பேர் திரும்பி வர முடியாதபடி சிக்கிக் கொண்டனர்.
நிலச்சரிவு மற்றும் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி அவர்கள் தவிப்பதை அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆபத்தான முறையில் பாறைகளில் கயிறுகளைக் கட்டி ஒவ்வொருவராக 28 பேரையும் மீட்டனர்.