உத்தரப்பிரதேசத்தில் கடுமையான வெயில் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 34 பேர் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்குமேற்பட்ட முதியவர்கள். கடும் வெயில் வாட்டுவதால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் நலனுக்காக மருத்துவமனையில் மின்விசிறிகள், ஏர் கூலர்கள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.