செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

போலி கணக்கு தொடர்பான வழக்கு : ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

Jun 15, 2023 08:34:13 PM

போலி கணக்கு தொடர்பான வழக்கில் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் இந்தியாவில் ஃபேஸ்புக் செயலியை தடை செய்ய நேரிடும் என கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மங்களூருவைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் என்பவர் சவுதி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்திய அரசு கொண்டு வந்த சிஏஏ மற்றும் என்.ஆர்.சி ஆகிய திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. பயந்துபோன ஷைலேஷ் அந்தப் பதிவை நீக்கிவிட்டு, தனது ஃபேஸ்புக் கணக்கையும் அழித்துள்ளார்.

ஆனால் அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கிய விஷமிகள், சவுதி அரேபிய அரசுக்கு எதிராக அவதூறு செய்தியை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஷைலேஷை அந்நாட்டு அரசு கைது செய்து, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தனது கணவரை மீட்டுத் தரும்படி ஷைலேஷின் மனைவி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

விசாரணையின்போது, ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக கர்நாடக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து போலி கணக்கு தொடங்கிய நபர் குறித்த அறிக்கையை இன்னும் ஒரு வாரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement