செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

யூடியூப்பர்கள் எச்சரித்தும் கேட்கலன்னா இது தான்... நாகலாபுரம் நீர்வீழ்ச்சியில் சம்பவம்... மூழ்கி பலியான 3 மாணவர்கள்..!

May 17, 2023 09:36:59 AM

சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திர வனப்பகுதியில் அமைந்துள்ள நாகலாபுரம் அருவியில் குளிக்கச்சென்ற சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த விபரீதம் அரங்கேறி உள்ளது

சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் பூபதேஸ்வர கோணா வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் தான் விபரீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

டிரெக்கிங் பிரியர்களுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது இந்த அருவி. இதற்கு செல்வோர், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு 3 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் நடந்து சென்றால்தான் வனத்தின் மத்தியில் அமைந்துள்ள நாகலாபுரம் அருவியை அடைய முடியும்.

இங்கு நண்பர்களுடன் செல்லும் இளைஞர்கள் அருவியின் தடாகத்தில் குதித்து விளையாடுவது வழக்கம்

ஏற்கனவே பலர் இந்த நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பதால் , எச்சரிக்கையுடன் குளிக்க வேண்டும், நீச்சல் தெரியாதவர்கள் தடாகத்திற்குள் இறங்க வேண்டாம், நீச்சல் தெரிந்தாலும் வேகமான நீரோட்டம் உள்ள நேரங்களில் அருவியை நோக்கிச்செல்ல வேண்டாம் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகளை இந்த அருவி குறித்து வீடியோ வெளியிடும் யூடியூப்பர்கள் தவறாமல் சொல்வது வழக்கம்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து இந்த அருவிக்கு குளிக்கச்சென்ற ஐந்து இளைஞர்கள் , எச்சரிக்கையை மீறி மகிழ்ச்சியுடன் செல்பி வீடியோ எடுத்தும் சிறிய பாறை மீது இருந்து நீரில் குதித்தும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது தண்ணீரில் குதித்த மூன்று பேர் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் நண்பர்கள் இருவரும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் போலீசார், மீட்பு குழுவினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்த நாகலாபுரம் போலீசார், தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்திவேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த அருவியில் தற்காலிகமாக மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடையை கொண்டாட நீர்வீழ்ச்சிகளை நாடிச்செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவம் மேலும் ஒரு எச்சரிக்கை..!


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement