செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

"மக்களின் உணர்வின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி" 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை..!

Apr 30, 2023 04:28:32 PM

மன் கி பாத்-ன் 100-வது அத்தியாய ஒலிபரப்பில் பேசிய பிரதமர் மோடி, 100 கோடி மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி என தெரிவித்துள்ளார். மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை மனதின் குரல் நிகழ்ச்சி கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தொடங்கப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சி, இன்று 100-வது அத்தியாயத்தை எட்டியுள்ளது. மனதின் குரல் தனக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல எனக்கூறிய பிரதமர், அது ஒரு நம்பிக்கை எனவும், மக்களுக்கு தனது காணிக்கை எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சி பிறரின் நல்ல பண்புகளை கொண்டாடவும், குணங்களை மற்றவர்களுக்கு கடத்தும் ஒரு கருவியாகவும் திகழ்வதாக தெரிவித்தார்.

தூய்மை இந்தியா இயக்கம் உட்பட எந்த பிரச்சனைகளை எல்லாம் மனதின் குரல் பேசியதோ, அவை அனைத்தும் மக்கள் இயக்கமாக உருப்பெற்றதாக சுட்டிக்காட்டினார். 

பெண்களின் பங்களிப்பு குறித்து தான் பலமுறை பேசியதாக கூறிய பிரதமர், தமிழகத்தின் பழங்குடியின பெண்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்வது குறித்தும், வேலூரில் நாக நதியை 20 ஆயிரம் பெண்கள் மீட்டெடுத்தது குறித்து பேசியதையும் மிண்டும் நினைவுகூர்ந்தார்.

நாட்டில் பலர், எண்ணற்ற பல தியாகங்களை செய்துவருவதாகவும், அவற்றை பேசும்போது தான் உணர்ச்சி வயப்பட்டதாகவும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.. டெல்லிக்கு சென்ற பிறகு பணிகள் வேறு விதமாக மாறியதாகவும், ஒரு வெறுமையை உணர்ந்ததாகவும் குறிப்பிட்ட பிரதமர், மனதின் குரல் அதற்கு ஒரு தீர்வாக வந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் உட்பட 22 இந்திய மொழிகள் மற்றும் பிரெஞ்சு, அரபிக் உட்பட 11 வெளிநாட்டு மொழிகளிலும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. இதேபோல், நியூ ஜெர்சி, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றிலும் மனதின் குரல் நேரலையை இந்திய வம்சாவளியினருடன் அமைச்சர்கள் கேட்டனர்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement