செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இவ்வளவு வேகமாக ராகுலின் எம்.பி பதவி பறிபோக காரணம் யார் தெரியுமா.? அவரே தான் இவர்... இவரே தான் அவர்..!

Mar 25, 2023 10:51:14 AM

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவியை, மேல்முறையீட்டுக்கான காலம் வரை பறிக்காமல் இருக்க, மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று ராகுல்காந்தி வரவிடாமல் தடுத்த நிலையில், இன்று அவர் பதவி பறிபோக அதுவே காரணமாகி இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. 

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ராகுல் தரப்பு நடவடிக்கை மேற்கொண்ட வந்தது.

2 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பதவியில் நீடிக்க இயலாது என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் விதிகளை பயன்படுத்தி ராகுல் வகித்து வந்த வயநாடு தொகுதி எம்.பி பதவியை மக்களவை செயலகம் பறித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு ராகுலின் எம்.பி பதவியை உடனடியாக பறித்ததாக கூறி காங்கிரசார் கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் ராகுலின் பதவி உடனடியாக பறிபோக அவர்தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951ல் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டுவர அவசர சட்டம் பிறப்பிக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாத காலங்களுக்குள் மேல்முறையீடு செய்தால், அந்த தண்டனையை ரத்து செய்யும் வரையிலோ அல்லது தண்டனையை உறுதிசெய்யும் வரையிலோ சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் பதவியில் தொடர்வார்கள் என்று அவசரச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இதனை கடுமையாக எதிர்த்த அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அவசரச் சட்டம் 'கிழித்து வீசியெறிய வேண்டிய ஒன்று' எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ராகுலின் எதிர்ப்பு காரணமாக அவசர சட்டம் கொண்டு வரப்படுவது கைவிடப்பட்டது. அதனை சட்டமாக நிறைவேற்றியிருந்தால் இப்போது ராகுல்காந்தியின் எம்.பி பதவியை இவ்வளவு வேகமாக மக்களவை செயலகம் பறித்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .


Advertisement
டீ சப்ளை செய்வதில் முன்விரோதம் - டீ வியாபாரி கொலை வழக்கில் 7 பேர் கைது
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம்
வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்..!!
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
சமூக வலைத்தளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர்.. கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம்
ராகுல் காந்திக்கு எம்.எஸ்.பி.யின் விரிவாக்கம் தெரியுமா? - அமித் ஷா கேள்வி
குரங்கம்மை நோய் பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுரை
கேரள மாநிலம் திருச்சூரில் 3 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ரூ.65 லட்சம் கொள்ளை என தகவல்
குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்ற பேருந்து... ஆன்மீகச் சுற்றுலா சென்ற 28 பயணிகள் பத்திரமாக மீட்பு
பிரேக் டவுன் ஆகி நின்ற லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்து..

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement