செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாழ்வதற்கு வழி தேடாமல் வலியின்றி சாவதற்கு கூகுளில் தேடிய விபரீத பொறியாளர்..! காருக்குள் கிடந்த சடலம்

Dec 22, 2022 12:21:43 PM

பொறியாளர் ஒருவர் வலியில்லாமல் உயிர்பிரிய வேண்டும் என்பதற்காக, காரை உள்பக்கமாக லாக் செய்து விட்டு, நைட்ரஜன் வாயுவை சிலிண்டர் மூலம் சுவாசித்து உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. இருதய நோய்க்கு மருத்துவரைப் பார்க்காமல் மரணத்தை நாடிய விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பெங்களூருவில் மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்த 51 வயதான வினைகுமார். பொறியாளரான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கும் பூங்கா அருகே தனது போர்டு காரை நிறுத்தி உள்ளார்.

சிறிது நேரம் கழித்து காருக்குள் இருந்து புகை வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரின் கதவை உடைத்து திறந்தனர். காரின் பின் இருக்கையில் பிளாஸ்டிக் பையால் முகம் மூடப்பட்டிருந்த நிலையில் வினைகுமார் சடலமாக கிடந்தார் அருகில் சிலிண்டர் ஒன்று இருப்பதையும் கண்டெடுத்தனர். சிலிண்டரில் இருந்து வந்த டியூப்பை வினைக்குமார் தனது வாயில் சொறுகி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். தனது கணவர் வினைகுமார் இருதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அதீத மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி தெரிவித்தார். சிலிண்டரை ஆய்வு செய்ததில் அதில் நைட்ரஜன்வாயு நிரப்பப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

இருதய நோயிலிருந்து விடுபட முடியாது என்ற முடிவுக்கு வந்த வினய்குமார் குணப்படுத்த மருத்துவரை நாடாமல் வலிக்காமல் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று கூகுளில் தேடி உள்ளார்.

அதன்படி நைட்ரஜன் சிலிண்டர் ஒன்றை வாங்கி, முகத்தை பிளாஸ்டிக் பையால் சுற்றி சிலிண்டரில் உள்ள டியூப் வழியாக நைட்ரஜன் வாயுவை வாய்க்குள் செலுத்தி சுவாசித்துள்ளார். நைட்ரஜன் வாயுவை சுவாசித்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்த நிலையில் நைட்ரஜன் வாயு கார் முழுவதும் பரவி கரும்புகை காருக்குள் இருந்து வெளியே கசிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement