செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

''விரைவில் உள்நாட்டில் பயணிகள் விமானம் தயாரிப்பு'' பிரதமர் மோடி அறிவிப்பு..!

Oct 30, 2022 06:26:27 PM

குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 ரக ராணுவ சரக்கு விமானத் தொழிற்சாலைக்கு, அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, விரைவில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பயணிகள் விமானமும் தயாரிக்கப்படும் என அறிவித்தார். 

இந்திய விமானப்படையில் தளவாடங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக, ஆவ்ரோ-748 ரக விமானங்களை பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், அதனை மாற்றவும், அதற்கு பதிலாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சி-295 ரக விமானங்களை வாங்கவும் முடிவு செய்த மத்திய அரசு, 21 ஆயிரம் கோடி ரூபாயில் 56 விமானங்களை வாங்க, கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதன்படி, 16 விமானங்கள் ஸ்பெயினில் இயங்கும் ஏர் பஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 2023 முதல் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

எஞ்சிய 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் வகையில் ஏர்பஸ் நிறுவனம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, குஜராத் மாநிலம் வதோதராவில், 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சி-295 ரக போக்குவரத்து விமானங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவ திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விமான தயாரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், உலக அளவில் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருவதாகவும், 'மேக் இன் இந்தியா' மற்றும் 'மேக் ஃபார் வோர்ல்ட்' ஆகிய அணுகுமுறையுடன் நாடு மேலும் வலுப்பெற்று வருவதாகவும் கூறினார்.

வதோதராவில் சி-295 விமானங்களைத் தயாரிப்பது நமது ராணுவத்திற்கு மேலும் வலிமையை அளிப்பதாக இருக்கும் என குறிப்பிட்ட பிரதமர், விரைவில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் பயணிகள் விமானம் தயாரிக்கப்படும் என்றார். வதோதரா ஆலையில், 2031ம் ஆண்டுக்குள் 40 விமானங்களும் தயாரிக்கப்பட்டு
மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படள்ளன.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement