செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ஒரே நாடு - ஒரே உரம் திட்டம்... பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Oct 17, 2022 03:39:42 PM

ஒரே நாடு, ஒரே உரம் எனும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இன்று முதல், யூரியா அனைத்தும், பாரத் எனும் ஒரே பெயரில் விற்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 நாள் வேளாண் மாநாட்டையும், கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 600 விவசாய இடுபொருள் மையங்களையும் தொடங்கி வைத்து, வேளாண் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இதேபோல், பி.எம் பாரதிய ஜன் உர்வரக் ப்ரியோஜனா ஒரே நாடு - ஒரே உரம் எனும் புதிய திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், 12வது தவணையாக 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக கூறினார். ஒரே நாடு - ஒரே உரம் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு மலிவான விலையில் நல்ல தரமான உரம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் உரங்களின் தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விவசாய பயிர்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் கூறினார். மேலும் இன்று முதல் யூரியா அனைத்தும், பாரத் என்ற ஒரே பெயரில் விற்கப்படும் என்றார் அவர்.

நானோ யூரியாவை பயன்படுத்துவதன் மூலம், யூரியா உற்பத்தியில் தன்னிறைவு அடையும் லட்சியத்துடன் இந்தியா பணியாற்றி வருவதாகவும், இது இந்திய வேளாண் துறையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதுமுள்ள 3 லட்சத்து 15 ஆயிரம் உர விற்பனை கடைகளை பிரதம மந்திரி சம்ருதி கேந்திர மையங்களாக மாற்றும் பணி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சர்வதேச அளவில் விவசாய பொருள்கள் தயாரிப்பு மையமாக, இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்றும், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement