செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் இலக்கு - பிரதமர் மோடி

Oct 11, 2022 08:42:02 PM

அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வதே தமது அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.

இதில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கடை கோடியில் வாழும் அடித்தட்டு மக்களுக்கும் விரைந்து அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றும், அதை இலக்காக வைத்தே தமது அரசு பணியாற்றி வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் சுமார் 45 கோடி பேர் வங்கி கணக்கு இல்லாமல் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கையானது அமெரிக்க மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் என்றும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்த 45 கோடி பேருக்கும் தமது அரசின் நடவடிக்கையால் வங்கி கணக்குத் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதேபோல், பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையை விட 2 மடங்கு அதிகமான எண்ணிக்கையான 13 கோடி பேருக்கு காப்பீடு அளித்திருப்பதாகவும் கூறினார்.

11 கோடி குடும்பங்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரப்பட்டிருப்பதாகவும், 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளதென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சி பயணத்தில் தொழில்நுட்பமும், திறமையும் 2 தூண்களாக திகழ்வதாகவும், இந்திய தொழில்நுட்பமானது, யாரையும் புறக்கணிப்பது கிடையாது, அனைவரையும் உள்ளடக்கியது என்றும் பிரதமர் தெரிவித்தார்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement