செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

5ஜி சேவையை தொடங்கி வைத்த பிரதமர்.. வரலாற்று சிறப்புமிக்க நாள் என பெருமிதம்..!

Oct 01, 2022 05:37:33 PM

அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5ஜி சேவையை நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் மோடி, 5ஜி தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதால், இந்தியாவிற்கு இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றார். 

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 4 நாள் இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு 5ஜி சேவை தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார். இதனை அடுத்து, அதிவேக 5ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஜியோ அரங்கில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி பிரதமருக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் செயல்பாட்டினை விளக்கினார்.

இதேபோல் பல்வேறு அரங்குகளில் 5 ஜி செயல்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த சாதனங்களை பிரதமர் பார்வையிட்டார். மெய்நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், டெல்லியில் இருந்தே ஸ்வீடனில் உள்ள காரை ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன் பிரதமர் இயக்கிப்பார்த்தார்.

தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையை விட பல மடங்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் 5ஜி, பின்னடைவு இல்லாத இணைய சேவை, பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.

இயந்திரங்களுக்கு இடையிலான தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை உள்ளடக்கிய சேவையை 5ஜி அளிக்கிறது. 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு தற்சார்பு இந்தியா திட்டத்தை அறிவித்தபோது பலரும் நகைத்த நிலையில், தற்போது அவை நிறைவேற்றப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டில் ஒரு ஜி.பி. டேட்டா 300 ரூபாய் அளவிற்கு இருந்த நிலையில், தற்போது 10 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், 5ஜி சேவை மூலம் காணொலி வாயிலாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களும் 5ஜி சேவையின் மூலம் பயனடைய உள்ளதாக கூறினார்.

இதனிடையே, அடுத்த 6 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் 5ஜி சேவையை பெறும் என்றும், 2 ஆண்டுகளில் நாட்டில் 90% பகுதிகளில் 5ஜி சேவை மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement