செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கால்வாயை ஆக்கிரமித்து கோடிகளைக்கொட்டி கட்டிய வில்லாக்களே வில்லனானது..! பெங்களூருவில் ஒரு க(ர)ன மழைக்காலம்..!

Sep 12, 2022 10:07:40 PM

கால்வாயை ஆக்கிரமித்து சொகுசு வில்லாக்கள் கட்டியதற்கான பலனை பெங்களூரு ரெயின்போ டிரைவ் லேஅவுட் வில்லா வாசிகள் அனுபவித்து வருகின்றனர். நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் என்ன நிகழும் என்பதற்கு சாட்சியாய் மாறிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையை 2015ஆம் ஆண்டு புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்திற்கு பின்னரும் இன்றுவரை பல இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், மழை நீர் கால்வாய் பணிகளை மேற்கொள்வதிலும் வேகம் குறைவாகவே காணப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நீர் நிலை ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாததால் பெங்களூரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. பல ஐ.டி நிறுவனங்களில் இன்னும் மழை நீர் வடியவில்லை, தரை மட்ட கார் பார்க்கிங்கில் ஏராளமான கார்கள் நீரில்மூழ்கி காணப்படுகின்றது. வெள்ளத்தை வடியவைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கால்வாய் அக்கிரமிப்பால் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.

குறுகலான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருந்து பரிசல்கள் மூலம் வெளியே சென்று தங்கள் அத்தியாசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்...

வெள்ள நீர் சாலையில் வடியாமல் தேங்கி நிற்பதால், ஆடியிலும், பென்ஸிலும், பெண்ட்லியிலும் , டயோட்டாவிலும் சொகுசாக சென்று வந்தவர்களில் பலர், மண் ஏற்றிச்செல்லும் டிராக்டரின் மீது ஏறி அமர்ந்து தங்கள் வீடுகளில் இருந்தும், பணி செய்யும் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்....

கொட்டித்தீர்த்த கனமழையால் எலக்ட்ரானிக் சிட்டி பொறியாளர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு தங்கள் பலகோடி கொட்டிக் கொடுத்து வாங்கிய வில்லாக்களே தற்போது வில்லனாக மாறி உள்ளது.

குறிப்பாக வெனீஸ் நகரம் போல நீரால் சூழப்பட்டு காணப்படும் ரெயின்போ டிரைவ் லேஅவுட் வில்லாக்கள் முழுமையாக ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றை விரைவாக அகற்றாவிட்டால் தாங்கள் இடித்து அகற்றுவோம் என்று 15 க்கும் மேற்பட்ட வில்லா உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கனமழையில் வில்லாக்கள் மூழ்கிய போது அமைதியாக இருந்த அதிகாரிகள், இப்போதே வெளியேற்ற வேண்டும் என தற்போது வலியுறுத்தி வருவதால் வில்லாக்களின் உரிமையாளர்கள் பதற்றத்தில் உள்ளனர்.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement