கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டுநாள் மாநாடு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று தொடங்குகிறது. 36 மாநிலங்களின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
தேசிய அளவில் கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க மாநில அரசுகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் மத்திய அரசு கேட்டுள்ள நிலையில், இக்கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் வேளாண் துறையில் இருந்து கூட்டுறவுத்துறையை தனித்து செயல்பட பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியது.