செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கடற்படைக்கு வலுசேர்க்க உள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்..!

Aug 30, 2022 06:36:27 PM

கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை கொச்சியில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலை கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன்மூலம் விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

வீரர்கள், பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 700 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே ரக போர் விமானங்கள், கமோவ் கே.ஏ.- 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்ஹெச் - 60ஆர் ஹெலிகாப்டார்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும்.

262 மீட்டர் நீளம் மற்றும் 59 மீட்டர் உயரம் கொண்ட இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடை கொண்டதாகும். மேலும் 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது. 15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன. மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த போர்க்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும்.

இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என பல மருத்துவ வசதிகள் இடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில், கொச்சியில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். அன்றைய தினமே மங்களூரில் நடைபெறும் விழாவில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

 


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement