செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கத்திக்குத்தில் படுகாயம்..! உயிருக்குப் போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

Aug 13, 2022 01:26:23 PM

இந்திய வம்சாவளி நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கத்தியால் குத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. 1980களில் Satanic Verses என்ற நாவலை எழுதி மத அடிப்படைவாத அமைப்புகளின் பத்வாவுக்கு ஆளானவர் அவர். 75 வயது நிரம்பிய அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நியுயார்க் மாகாணம் Buffalo பகுதியில் கல்வி மையம் ஒன்றில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த நபர் மேடையேறி சல்மான் ருஷ்டியை சரமாரிக் குத்தினான். கழுத்து மார்பு வயிறு என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சல்மான் ருஷ்டி கீழே சாய்ந்தார். உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேடையில் அவனைப் பிடிக்க முயன்ற சிலருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற அந்த இளைஞனை கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் பெயர் நியூஜெர்சியின் ஃபேர்வியூ பகுதியைச் சேர்ந்த ஹாதி மத்தர் என்பது தெரிய வந்தது. நியுபெனின்சுலா பகுதியில் பலத்த பாதுகாப்புள்ள இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக நியுயார்க் ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கல்லீரல், கண் போன்றவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தனது ஒரு கண்ணை இழக்க நேரிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டது பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல் என உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் உள்ளிட்ட பலர் டிவிட்டரில் நலம் விசாரித்துள்ளனர்.


Advertisement
சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை... ஏ.கே. 47 துப்பாக்கி, வெடி பொருட்களும் பறிமுதல்
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வருடாந்திர பிரம்மோற்சவம்.. சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு..!
படப்பிடிப்புக்குக் கொண்டு வரப்பட்ட யானைகள் மோதல்.. காட்டுக்குள் ஓடிய யானையை தேடும் படக்குழுவினர்..!
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
திருப்பதி லட்டு கலப்பட்ட விவகாரம்... புதிய விசாரணைக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement