ஹரியானா மாநிலத்தில், இரயில் தண்டவாளத்தை அவசரகதியில் கடக்க முயன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது விரைவு ரயில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த வீர் சிங் என்பவர், விடுமுறை தினத்தில் தனது சகோதரியை காண மஜ்ரா குர்த் பகுதிக்கு சென்ற போது, ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டு விபத்தில் சிக்கினார்.