950 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட விவோ நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளைச் செயல்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த செல்பேசி நிறுவனமான விவோவில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், அந்நிறுவனம் வரி விதிப்பைத் தவிர்க்க 62 ஆயிரத்து 476 கோடி ரூபாயைச் சட்டவிரோதமாகச் சீனாவுக்குப் பரிமாற்றம் செய்ததைக் கண்டுபிடித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கிக் கணக்குகளில் எப்போதும் குறைந்தது 250 கோடி ரூபாயை வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டும் கணக்குகளைச் செயல்படுத்த அனுமதித்தார்.