செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தல்.. 5 பேர் கும்பல் டெல்லியில் கைது..!

Jul 10, 2022 02:11:21 PM

டெல்லியில் தமிழக தொழில் அதிபரை  துப்பாக்கி முனையில் கடத்தி, 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் கே.எஸ்.வில்வபதி நூற்பாலை நடத்தி வருகிறார்.

இவரை டெல்லியில் இருந்து ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, வங்காளதேசத்துக்கு 50 டன் நூல் தேவை என்றும், ஒன்றே கால் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்றும் பேசியுள்ளார்.

மேலும் அதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட டெல்லிக்கு வருமாறு அந்த நபர் வில்வபதியை அழைத்துள்ளார்.

இதனை நம்பிய வில்வபதி தன்னுடைய மேலாளர் வினோத்குமாருடன் விமானம் மூலம் கடந்த 7-ந்தேதி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவரை மர்ம கும்பல் ஒன்று அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு இடத்துக்கு கடத்திச் சென்றது.

பின்னர் அவரிடம் உங்களை கொலை செய்வதற்கு 40 லட்சம் ரூபாய் ஒருவர் பேரம் பேசி இருப்பதாகவும், நீங்கள் 50 லட்சம் ரூபாய் தந்தால் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளது. உடனே பணத்தை தயார் செய்யும்படி துப்பாக்கி முனையில் அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

இதனை அடுத்து வில்வபதி, ஊரில் உள்ள தன் மகளின் மாமனாருக்கு போன் செய்து 'வியாபார விஷயமாக தமக்கு 50 லட்ச ரூபாயை ரொக்கமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒருவித பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த வில்வபதியின் சம்பந்தி திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த பிரச்னை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் அவர் உடனே அரியானா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்குள்ள சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யான கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் பாலன் சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டார்.

வில்வபதி குருகிராம் அழைத்துவரப்பட்டதும், பின்னர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதும் செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

டெல்லி போலீசாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய அரியானா போலீசார், வெள்ளிக்கிழமை இரவு டெல்லி ஷியாம் நகர் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த வில்வபதி, வினோத்குமார் ஆகியோரையும் மீட்டனர்.

தமிழக, டெல்லி, அரியானா போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன், தொழிலதிபரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.


Advertisement
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement