தெற்கு பாகிஸ்தானில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் மற்றும் சூறாவளி சுழற்சியின் காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜாம்நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது.
தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் மஸ்கா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்தை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.