ஆகாசா ஏர் விமான நிறுவனம், வணிக ரீதியில் விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம், அந்த நிறுவனம் இம்மாத இறுதியில் விமான சேவையை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரகத்தில் 72 விமானங்களை வாங்க கடந்த ஆண்டே அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
2022 - 23 நிதியாண்டின் இறுதிக்குள், அந்நிறுவனம் 18 விமானங்களையும், அதன் பிறகு ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் 14 விமானங்கள் வரை போயிங் நிறுவனத்திடம் ஆகாசா ஏர் நிறுவனம் பெறும் என தகவல் வெளியாகி உள்ளது.