செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

16 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்க ஜூலை 11 வரை தடை..!

Jun 28, 2022 07:34:21 AM

மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் சிண்டே தலைமையிலான 16 சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11 வரை தகுதி நீக்கம் செய்யத் தடை விதித்துள்ளது.

ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேருக்குத் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் நரஹரி சிர்வால், திங்கள் மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 16 பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்றத்தை ஏன் அணுகவில்லை என வினவினர். அதற்கு சிண்டே சார்பிலான வழக்கறிஞர், மும்பையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், சட்டப்படியான தீர்வுகளைப் பெறும் சூழல் இல்லை என்றும் பதிலளித்தார்.

துணைசபாநாயகரை நீக்கக் கோரிய தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என வாதிட்டார். மனுதாரர்களின் வீடுகள் தாக்கப்படுவதாகவும், அவர்கள் மும்பைக்கு வந்தால் வெட்டிக் கொல்லப்படுவார்கள் என மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, அவசரம் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனப் பேரவைத் துணை சபாநாயகருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தகுதி நீக்க நோட்டீசுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்கும் காலக்கெடுவை ஜூலை 11ஆம் நாள் மாலை ஐந்தரை மணி வரை நீட்டித்தும், அதுவரை தகுதி நீக்கம் செய்யத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

ஐந்து நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யப் பேரவைத் துணை சபாநாயகர், செயலர் ஆகியோருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை 11ஆம் நாளுக்குத் தள்ளி வைத்தனர்.


Advertisement
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement