செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இன்று கூடுகிறது சிவசேனா செயற்குழு - அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை.!

Jun 25, 2022 06:12:33 AM

மகாராஷ்ட்ராவில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளார். அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறி உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிவசேனா கட்சியின் செயற்குழு இன்று விவாதிக்கிறது.

மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 30க்கும் மேற்பட்டோருடன், அமைச்சர் ஏக்நாத் சிண்டே கவுகாத்தியில் விடுதி ஒன்றில் முகாமிட்டுள்ளார். சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஏதிரணியாக ஒன்று திரண்டதால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், துணை முதலமைச்சர் அஜித் பவார், உள்ளிட்டோருடன் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஆட்சித் தக்கவைக்க சிவசேனா உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையின் மீது நம்பிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.

16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், துணை சபாநாயகர் Narhari Zirwal, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே காணொலி மூலம் தொண்டர்களை சந்தித்த முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, தனக்கு பதவி ஆசையில்லை என்றும் முதலமைச்சர் பதவியை துறக்க தயார் என்றார். ஏக்நாத் ஷிண்டேவுக்காக தான் வகித்த துறையை விட்டுக் கொடுத்ததாகவும், அவரது மகனுக்கு எம்.பி. பதவி வழங்கியதாகவும் உத்தவ் தாக்ரே தெரிவித்தார்.

சிவசேனா செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், பெரியளவிலான போராட்டங்கள் நடக்கக்கூடும் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் மும்பை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement