காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சோனியா காந்தியின் உடல் நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சோனியாவுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது.