செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அரசு வேலைக்கு செல்லும் மனைவியின் கையை வெட்டி மறைத்து வைத்த கணவன்...!

Jun 07, 2022 10:31:23 PM

மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் கேக் வெட்டி கொண்டாடும் கணவன்மார்களுக்கு மத்தியில் கையை வெட்டி ஒளித்து வைத்த கொடூர சம்பவம் கொல்கத்தா அடுத்த கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

அங்குள்ள கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷரீபுல். இவரது மனைவி ரேணுகாதுன். தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரேணுகாவுக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு பணி ஆணை கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.

அரசு வேலை கிடைக்கும் செய்தி கணவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கணவர் ஷரீபுல் அவரை அரசு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆனால் ரேணு காதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்து வேலைக்குச் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே அரசு வேலையில் சேருவது தொடர்பாக மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷரீபுல் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளான்.

நள்ளிரவில் மனைவி உறங்கியதும் நண்பர்களுடன் வீட்டுக்குள் புகுந்த ஷரிபுல். நண்பர்களை ஏவி மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி சத்தம் போடாமல் செய்துள்ளான்.

வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கையை துண்டாக வெட்டியுள்ளான். துண்டாகிய கையை இணைத்து ஆபரேஷன் செய்துவிடக்கூடாது என்பதற்காக, துண்டான கையை எடுத்துச்சென்று ஒளித்து வைத்துள்ளான்.

வலியால் துடித்த ரேணுகாதுன் அண்டை வீட்டார் மற்றும் அவரது சகோதரர் துணையுடன், சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் பர்த்வானில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கையிருந்தால் பொறுத்திவிடலாம் என்று கூறி மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தலைமறைவான கணவர் ஷரிபுல், அவரது பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் தேடத் தொடங்கியுள்ளனர், அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.

மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement