செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்த அரக்கன்..! அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரம்

Jun 07, 2022 07:34:41 AM

காதல் மனைவியை , துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்து வைத்து விட்டு தப்பிச்சென்ற கணவனை போலீசார் தேடிவருகின்றனர்

தெலங்கானா மாநிலம் மகபூப்நகரை சேர்ந்தவர் அனில் குமார், கடந்த 2020 ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத் எஸ்பிஆர் ஹில்ஸ் பகுதியில் குடித்தனம் நடத்தி வந்தார்.

திருமணமான சில மாதங்களிலேயே அனிலுக்கும், சரோஜாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால் சரோஜா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து பெற்றோர் சமாதானப்படுத்தி சரோஜாவை ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சரோஜாவின் பெற்றோர் வழக்கம்போல் போன் செய்தபோது சரோஜா போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அனிலுக்கு போன் செய்தால் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரோஜாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜுப்ளி ஹில்ஸ் போலீசார் வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தண்ணீர் டிரம்மில் சரோஜா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது . அழுகிய நிலையில் துண்டு துண்டாக காணப்பட்ட சடலத்தை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் விசாரணையில் அணில் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து சரோஜாவை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்ததால் இருவருக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதால் உடற்பயிற்சி செய்யும் தம்புள்ஸ் என்ற கருவியால் சரோஜாவை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

காதல் மனைவியை உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்த அனில், கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் உள்ள டிரம்மில் மறைத்து வைத்துவிட்டு அதனை எடுத்துச்சென்று புதரில் வீச திட்டமிட்டுள்ளான் அதற்குள்ளாக மனைவியின் பெற்றோர் தங்கள் மகளை தொடர்பு கொள்ள இயலாததால், அனிலை தொடர்பு கொண்டுள்ளனர்.

இதையடுத்து மாட்டிக் கொள்ளக்கூடாது என்று வீட்டை பூட்டி விட்டு அனில் தலைமறைவானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக அனிலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Advertisement
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
காரில் கஞ்சா கடத்தல்.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீஸ்
தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. தலைமைக் காவலர் உயிரிழப்பு.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றிபெற முடியாது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவு
டீ சப்ளை செய்வதில் முன்விரோதம் - டீ வியாபாரி கொலை வழக்கில் 7 பேர் கைது
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம்

Advertisement
Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது


Advertisement