செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலனுக்கான நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்

May 30, 2022 12:36:20 PM

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து பணப் பயன்களைப் பிரதமர் மோடி விடுவித்தார்.

அதன்பின் பயனாளர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றால் குடும்பத்தினரை இழந்தோரின் துன்பம் எத்தகையது எனத் தான் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உயர்கல்விக்குக் கல்விக்கடன் வழங்கப் பிஎம் கேர்ஸ் உதவும் என்றும், அவர்களின் அன்றாடத் தேவைக்கு மாதந்தோறும் நாலாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். குழந்தைகளிடம் ஒரு பிரதமராகத் தான் பேசவில்லை என்றும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகப் பேசுவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய பிள்ளைகள் பள்ளிக்கல்வியை முடித்ததும் உயர்கல்வியைத் தொடர நிறையப் பணம் தேவைப்படும் என்றும், அதனால் 18 வயது முதல் 23 வயது வரை அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு 23 வயது நிறைவடையும் போது பத்து இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் மருத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஐந்து இலட்ச ரூபாய் வரை இலவசச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். எத்தகைய உதவியும் முயற்சியும் பெற்றோரின் அன்புக்கு ஈடாகாது எனக் குறிப்பிட்ட பிரதமர், பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்குப் பாரதத் தாய் துணையிருப்பதாகத் தெரிவித்தார்.

இது ஒரு தனிமனிதரின், அமைப்பின், அரசின் முயற்சி இல்லை என்றும், மக்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தில் வழங்கியதாகும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா சூழலில் மருத்துவமனைகளில் வசதி செய்யவும், வென்டிலேட்டர்கள் வாங்கவும், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவவும் பிஎம் கேர்ஸ் நிதி உதவியதாகவும், இதனால் எண்ணற்ற உயிர்கள் காக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொரோனா சூழலில் அகால மரணமடைந்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குப் பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement