செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பிரதமரைக் கவர்ந்த தஞ்சாவூர் பொம்மை... சுய உதவிக் குழுவுக்குப் பிரதமர் பாராட்டு.!

May 29, 2022 01:46:37 PM

தஞ்சாவூர்ப் பொம்மைகள் உள்ளூர்ப் பண்பாட்டைக் காட்டும் வகையில் உள்ளதாகவும், அவற்றைத் தயாரிக்கும் சுய உதவிக் குழுக்கள் மகளிருக்கு அதிகாரமளித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நூறு கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கியுள்ள புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை நூற்றைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

வெற்றிகரமான தொழில்முனைவராக விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கி, அங்கிருந்துகொண்டே இளைஞர்களைத் தொழில்முனைவோர் ஆகும்படி ஊக்குவிப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

தஞ்சாவூர் சுய உதவிக்குழு பரிசளித்த பொம்மை கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உள்ளதாகக் கூறிய மோடி, உள்ளூர்ப் பண்பாட்டைக் காட்டும் வகையிலான பொம்மையைச் செய்து பரிசளித்ததற்கு நன்றி தெரிவித்தார். 

ஜூன் ஐந்தாம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதை நினைவுகூர்ந்த பிரதமர், ஆன்மீகத் தலங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு அடுத்தவர்களையும் மரம் நட ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜூன் 21ஆம் நாள் உலக யோகாசன நாள் வருவதைக் குறிப்பிட்ட அவர், யோகா மூலம் உடல், ஆன்மீகம், அறிவுசார் நல்வாழ்வு ஊக்கம் பெறுவதை மக்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார்.

கடுங்கோடைக் காலத்தில் நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உயிர்களையும் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் நீரும் அளித்து மனிதநேயக் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 


Advertisement
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
காரில் கஞ்சா கடத்தல்.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Oct 02, 2024 in சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..


Advertisement