செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கருப்பா பிறந்தா அடிப்பீங்களா...? அழகு நிலைய அடாவடி பெண் கைது..! தொடரும் மனித நேயமற்ற தாக்குதல்

May 29, 2022 08:05:34 AM

கேரளாவில் அழகு நிலையம் முன்பு நின்று செல்போன் பேசியதால் தனது கடையின் அழகு கெட்டுவிட்டதாக கூறி மலைவாழ் பெண்ணை , அவரது மகள் கண் முன்பே அழகு நிலைய பெண் உரிமையாளர்  செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் அதே பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.

மருதங்குழி மலைகிராமத்தை சேர்ந்த சேபா என்ற பட்டதாரி பெண் தனது நகையை அடகு வைப்பதற்காக தனது மகளுடன் சாஸ்தமங்கலம் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார்.

மீனாவுக்கு சொந்தமான பியூட்டி பார்லர் முன்பு உள்ள பிளாட்பாரத்தில் நடந்து சென்ற போது சேபாவின் செல்போனில் அழைப்பு வந்துள்ளது.

அங்கு நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதைக் கடைக்குள் இருந்து பார்த்த மீனா, கருப்பு நிற பெண் தனது பார்லர் முன்பு நின்று செல்போன் பேசுவதால், கடையின் அழகு கெட்டுப்போவதாக கருதி மலை கிராம பெண்ணான சேபாவிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

எந்த தவறும் செய்யாத தான் எதற்காக தாக்கப்படுகிறோம் என்று தெரியாமல் சேபா பதறிபோன நிலையில் , அடங்காத மீனா, அவரது துப்பட்டாவை பிடித்து கீழே இழுத்து போட்டதுடன் சேபாவையும் கீழே தள்ளிவிட்டார்.

தனது தாய் தாக்கப்படுவதை தடுக்க இயலாமல் சிறுமியான அவரது மகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, மீனாவோ, மலைகிராம பெண்ணை தனது காலில் கிடந்த செருப்பை கழட்டி தாக்கி அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.

வெள்ளையாக பிறப்பதும் கருப்பாக பிறப்பதும் அவரவர் கையில் இல்லை என்பதை உணராமல் நிறவெறியுடன் மலைக்கிராம பெண் சேபா தாக்கப்பட்ட சம்பவம் மனித நேயமற்ற செயல் என்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் மீனாவின் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கேரளாவில் மலைக்கிராம இளைஞர் ஒருவரை பசிக்கு அரிசி திருடியதாக குற்றஞ்சாட்டி சிலர் அடித்தே கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
காரில் கஞ்சா கடத்தல்.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீஸ்
தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. தலைமைக் காவலர் உயிரிழப்பு.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement