செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மணிரத்னத்துக்கு தோசை ஊட்டிய மும்பை தாதா..! 35 ஆண்டுகளுக்கு பின் ஒப்புதல்..!

May 28, 2022 12:35:17 PM

கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்தை எடுப்பதற்கு முன்பாக, சென்னை சாந்தோமில் வீடு ஒன்றின் அண்டர்கிரவுண்டில் பதுங்கி இருந்த மும்பை தாதாவை நேரில் சந்தித்துப் பேசியதாக மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

நாயகன்.... கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்றும் சினிமா ரசிகர்களால் முக்கியமான படமாக கொண்டாடப்படுகிறது. கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மணிரத்னம் முதல்முறையாக இந்த படம் குறித்து மனம் திறந்து பேசினார்.

மும்பையில் தங்கி 2 ஆண்டுகள் படித்து வந்த காலகட்டத்தில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்களால் காப்பாளராக, கடவுளுக்கு நிகராக போற்றப்பட்ட வரதராஜ முதலியார் குறித்து அறிந்து வைத்திருந்ததாகவும், தான் இயக்குனரான பின்னர் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்ததாக கூறி உள்ளார் மணிரத்னம்.

நாயகன் படம் மும்பை தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியும் என்றாலும் படத்தை துவக்குவதற்கு முன்பாக, நண்பர் ஒருவர் மூலம் வரதராஜ முதலியாரை நேரில் சந்தித்ததை விவரித்த மணிரத்னம், சென்னை சாந்தோம் பகுதியில் ஒரு வீட்டின் அண்டர்கிரவுண்டில் பதுங்கி இருந்த வரதராஜ முதலியாரை சந்தித்து உங்கள் வாழ்க்கையை படமாக்க விரும்புவதாகக் கூறியதும், அவர் முழுமையான ஆளுமையோடு பேசியதை நினைவு கூர்ந்தார்.

இப்படித்தான் இந்தி இயக்குநர் ஒருவர் வந்து அனுமதி கேட்டார், படத்தில் தன்னை வில்லனாக தான் காட்டி இருந்தார், சினிமாகாரங்க எப்போதுமே எங்களை வில்லனாகவும் , கெட்டவனாகவும் தான் காட்டுறீங்க என்று ஆதங்கப்பட்டவாறே, என்ன சாப்பிடுறீங்க என்று வினவிய வரதராஜ முதலியார், உடனடியாக அங்கு தோசையை வரவைத்து தன்னை சாப்பிடச் சொன்னதாகவும், தான் தோசை சாப்பிடுவதை தவிர்க்க முயல அவரே தோசையை பிய்த்து சட்னியில் தொட்டு வற்புறுத்தி வாயில் ஊட்டிவிட்டதால் தனக்கு பதற்றமாகிவிட்டதாக மணிரத்னம் கூறி உள்ளார்.

சட்டத்தின் அனைத்து நுணுக்கங்களையும் தெளிவாக அறிந்து வைத்திருந்த வரதராஜ முதலியார், சென்னையில் பதுங்கி இருப்பது போலீசுக்கு பயந்து அல்ல என்றும், தான் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டால் கூட்டத்தை பயன்படுத்தி தன்னை எளிதாக கொலை செய்து விடுவார்கள் என்பதற்காகவே தான் இங்கு பதுங்கி வாழ்வதாக வரதராஜ முதலியார் தெரிவித்ததாக கூறிய மணிரத்னம் , இதனை வைத்தே நாயகன் படத்துக்கான கிளைமேக்ஸ் காட்சியில் வேலு நாயக்கர் விடுதலையாகி வரும் போது சுட்டுக் கொல்லப்படுவது போல காட்சிப் படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேக்கப் தொடங்கி கமல்ஹாசனின் திறமையான நடிப்பால் நாயகன் தற்போதும் ரசிக்கப்பட்டு வருவதாக மணிரத்னம் மகிழ்ச்சி தெரிவித்தார்.


Advertisement
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement